கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், 26 வயது நிரம்பிய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேலைத்தளத்தில் காயமடைந்த பிறிதொரு நபரை வைத்தியசாலைக்கு மோட்டார் சைக்கி ளில் ஏற்றிச்சென்றபோது, எதிரே வந்த பேரூந்தின் மீது மோதியதில் இவ் அனர்த்தம் நேர்ந்து ள்ளது.
மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியை சேர்ந்த பொன்னையா விஜயேந்திரன் என்ற இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனைகளை தொடர்ந்து, சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலி ஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment