உடுவில் மகளிர் கல்லூரி அதிபர் சிரானி மில்ஸ்சை, பதவியிலிருந்து நீக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மாணவிகளின் போராட்டம் தொடர்ந்து வருகின்ற நிலை யில், வட்டுக்கோட்டை தென்னிந்திய திருச்சபையில் சம்பிரதாயபூர்வமாக பதவியேற்ற பின்னர் புதிய அதிபர் இன்று பாடசாலைக்கு வந்துள்ளார்.
அப்போது மாணவிகள் அவரை பாடசாலைக்குள் நுழைய அனுமதிக்காது வாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது புதிய அதிபருக்கு ஆதரவான சிலர், மாணவிக ளைத் தாக்கியதாக கூறப்படுகிறது. பெயர் குறிப்பிட விரும்பாத குறித்த பாடசாலையின் பழைய மாணவி ஒருவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், பொலிஸார் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ள்ளதுடன் குறித்த பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படு கின்றது.
இதேவேளை உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மேலும் மூன்று மாணவிகள் வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment