Breaking News
recent

வடக்குமுதல்வருடன் அமெரிக்க பிரதித்தூதுவர் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க பிரதி தூதுவர் றொபேட் ஹில்டன் தலைமையிலான குழு இன்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டு, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வர னைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளது.



இன்று காலை 10.45 மணியளவில் அமெரிக்க குழுவினர், கைதடியில் முதலமைச்சரை சந்தித்தனர். சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக சந்திப்பு நீடித்தது.

சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த முதலமைச்சர், மத்திய அரசு வடமாகாண பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கைகளை மேற்கொண்டால், எமது நிர்வாகத்தினை நல்ல முறையில் நடாத்த முடியும்.

மேலெழுந்தவாரியாக கொழும்பில் தீர்மானங்களை எடுத்துவிட்டு, அதனை ஏற்றுக்கொள்ளு ங்கள் என கூறினால், அங்கு ஏற்படும் பிரச்சினைகள் பற்றி எடுத்துக்கூறினேன். 2000 வருட ங்கள் தனித்துவமாக வாழ்ந்த தமிழ் மக்களின் மொழி மற்றும் கலாசாரங்களை புரிந்து அதற்கேற்றவாறு அரசியல் யாப்பில் மாற்றங்களை கொண்டு வந்து அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதனை அமெரிக்க பிரதி தூதுவர் றொபேட் ஹில்டனுக்கு எடுத்து ரைத்ததாக தெரிவித்தார்.
சாணக்கியன்

சாணக்கியன்

No comments:

Post a Comment

Powered by Blogger.