Breaking News
recent

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அவன்கார்ட் தலைவர்

இன்று மாலை லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டஅவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் இவருடன் கைது செய்யப்பட்ட முன்னாள் மேஜர் ஜெனரல் பாலிதபிரனாந்துவுக்கும் பிணை கிடைத்துள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இவர்களுக்கு பிணை வழங்கியுள்ளார்.

தலா இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கப்பிணையிலும்,ஒரு கோடி ரூபாய்சரீரப் பிணை நான்கிலும் இவர்களுக்கான பிணை வழங்கப்பட்டுள்ளது.

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க மற்றும் பாலித பிரனாந்து ஆகியோர்இன்று மாலை கைது செய்யப்பட்டு கொழும்பு மாவட்ட பிரதான நீதவான் கிஹான்பிலப்பிட்டிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சாணக்கியன்

சாணக்கியன்

No comments:

Post a Comment

Powered by Blogger.